எனக்குள் நான்
ஒவ்வொறு மனிதனுக்குள்ளும் ஒருவன் இருப்பான் அவன்தான் உன்மையானவன். வெளி உலகதிற்காக வேடம் போடதவன். அதுபோல் எனக்குள் இருக்கும் என்னை அதாவது எனது சுய உனர்வுகளை இங்கே வெளிப்படுதுகிறேன் கவிதைகளாக.
Sunday, June 10, 2012
Sunday, December 18, 2011
தேநீர் வியாபாரி…
அதிகாலை முதல்
அந்திசாயும் வரை
அலுக்காமல் உழைத்திடும்
தொழிலாளிக்கும்
மாநகர் கான்க்ரீட்
பூங்காவாகி போன
அலுவல்களில்
அலுவல்
புரியும்
அலுவலர்க்கும்
ஏற்படும்
அக
அலுப்புகளை
புறந்தள்ளி
புத்துணர்ச்சி
பூக்கவைக்க
ஆவி பறக்க
ஆற வைத்த
பருகும் சூடில்
திடமாகவோ
நிறமாகவோ
ஏலம் கலந்தோ
இவன் தரும்
தேநீர் போதுமானது
கோப்பைகள்
குறைய குறைய
இவன்
புத்துணர்ச்சி கூடும்
குறையாவிடில் குறையும்
பல நேரங்களில்
பலருக்கு பசியாற்றும்
இவன் தேநீர்
இவனுக்கு
மட்டும்
ஏனோ
விற்காவிடில்
ஆற்றுவதில்லை
இவன்
பசியை
Sunday, November 20, 2011
தலைவர் வருவார்
கதிர்காம
கந்தனும்
உம்மை
காக்கவில்லை
தந்தையர்
தேசமும்
உமக்கு
துரோகம்
இழைத்தது
அதை
பொறுத்திடா
தோழன் முத்துகுமரனும்
தோழி செங்கொடியும்
தம்
இன்னுயிர் ஈந்தனர்
இவை
எல்லாம்
கண்டு
உள்ளம்
பொறுமுகிறேன்
இந்த வீணாய் போனவன்
கண்ணாடி சிறையில்
வருந்தாதே
தொப்புள்
கொடி
உறவே
வரும்
மாவீரர்
தினமான
நவம்பர் 27 ல்
முதல் புலி
வரும்
ஈழம்
மீட்டெடுக்கும்
கந்தன்
கைவிட்டாலும்
காவலன்
காப்பான்
என்று
நம்புவோமாக
Wednesday, October 5, 2011
Saturday, October 1, 2011
நடிகர் திலகம்
இந்திய திரைஉலகின்
தெய்வமகனே
நாங்கள் கண்ட
கட்டபொம்மனே
எங்கள் கப்பல் ஒட்டிய தமிழனே
இந்தியாவின்
மர்லன் ப்ரண்டோவே
நடிப்பிலே
உமக்கு முன்னோடி
இல்லை
உமக்கு பின்னோடி
வந்தவர் பலர்
நடிப்பின் இலக்கணமே
என்று பிரான்சிலே
கைரோவிலே
ஏற்று கொண்ட
உம்மை
ஓர் இந்திய சிறந்த நடிகருக்கான
தேசிய விருது
கூட தராமல்
ஒதுக்கப்பட்டதை
எண்ணி
மனம் வேகிறது
இறந்தும் இறவா
புகழோடு வாழ்பவரே
இந்த மண்ணை விட்டு
நீர் மறைந்தாலும்
என்றுமே
திரை உலகின்
விடி வெள்ளி நீர்தான்
Sunday, September 25, 2011
செங்கொடி
Saturday, November 22, 2008
மனிதபிறவி
ஒருவனும்
ஒருத்தியும்
ஒருயிராய்
ஒருங்கிணைய
இன்னொரு
உயிராய்
அழுகையோடு
இன்பம்பொழிந்து
தலைகீழாய்
உலகில்
உதித்து
தவழ்ந்து
வாழ்க்கை
பாதையில்
சிரமப்படாமல்
நேராகச் செல்ல
சிரமப்பட்டு
கண்ணீரோடு கவலையில் வாடி
பொருளைத் தேடி — பின்
காதல் நாடி
காமத்தில் கூடி — மீண்டும்
இன்னொரு உயிராய்
உதித்து
உதித்து
மறையும்
இந்தப்
மனிதப்பிறவியில்
முடி வேந்தாயினும்
பிடிச் சாம்பலாய்
காற்றில் கலக்கணும்
ஆயினும்
மீண்டும்
மனிதனாய்
தோன்றி
மறைய
மாதவம்
புரிவேன்
Monday, October 20, 2008
அம்மா
அழகு
அழகாய்
ஆயிரமாயிரம்
பொய்களை
ஏதேதோ
கவிதை
என்று
எழுதினேன்
ஏனோ
உன்னைப்பற்றி
எழுத
எத்தனிக்கையில்
"அன்பு"
என்ற
மூன்றெழுத்தை
தவிர
வேறு
எழுத்துக்களையோ
வார்த்தைகளையோ
காகிதத்தில்
தூவவில்லை
என்
தூவல்
அழகாய்
ஆயிரமாயிரம்
பொய்களை
ஏதேதோ
கவிதை
என்று
எழுதினேன்
ஏனோ
உன்னைப்பற்றி
எழுத
எத்தனிக்கையில்
"அன்பு"
என்ற
மூன்றெழுத்தை
தவிர
வேறு
எழுத்துக்களையோ
வார்த்தைகளையோ
காகிதத்தில்
தூவவில்லை
என்
தூவல்
வேண்டும் இன்னுமோர் சுனாமி!
காலார நடந்து
கடற்கரைக்கு
காலத்தை
களிப்போடு
கழிக்க
வந்தேன்
கடற்கரை
கட்டுமரங்கள்
காதல் போர்வையில்
காம களியாட்டம்
ஆடுவோர்
களிப்பு அறை
ஆனதால்
கடுஞ்சினத்தோடு
இறைவனிடம்
வேண்டினேன்
இன்னுமோர்
சுனாமி
வேண்டும்
என்று
கடற்கரைக்கு
காலத்தை
களிப்போடு
கழிக்க
வந்தேன்
கடற்கரை
கட்டுமரங்கள்
காதல் போர்வையில்
காம களியாட்டம்
ஆடுவோர்
களிப்பு அறை
ஆனதால்
கடுஞ்சினத்தோடு
இறைவனிடம்
வேண்டினேன்
இன்னுமோர்
சுனாமி
வேண்டும்
என்று
Subscribe to:
Comments (Atom)






