Saturday, November 22, 2008

மனிதபிறவி

ஒருவனும்

ஒருத்தியும்

ஒருயிராய்

ஒருங்கிணைய

இன்னொரு

உயிராய்

அழுகையோடு

இன்பம்பொழிந்து

தலைகீழாய்

உலகில்

உதித்து

தவழ்ந்து

வாழ்க்கை

பாதையில்

சிரமப்படாமல்

நேராகச் செல்ல

சிரமப்பட்டு

கண்ணீரோடு கவலையில் வாடி

பொருளைத் தேடி — பின்

காதல் நாடி

காமத்தில் கூடி — மீண்டும்

இன்னொரு உயிராய்

உதித்து

உதித்து

மறையும்

இந்தப்

மனிதப்பிறவியில்

முடி வேந்தாயினும்

பிடிச் சாம்பலாய்

காற்றில் கலக்கணும்

ஆயினும்

மீண்டும்

மனிதனாய்

தோன்றி

மறைய

மாதவம்

புரிவேன்

No comments: