கதிர்காம
கந்தனும்
உம்மை
காக்கவில்லை
தந்தையர்
தேசமும்
உமக்கு
துரோகம்
இழைத்தது
அதை
பொறுத்திடா
தோழன் முத்துகுமரனும்
தோழி செங்கொடியும்
தம்
இன்னுயிர் ஈந்தனர்
இவை
எல்லாம்
கண்டு
உள்ளம்
பொறுமுகிறேன்
இந்த வீணாய் போனவன்
கண்ணாடி சிறையில்
வருந்தாதே
தொப்புள்
கொடி
உறவே
வரும்
மாவீரர்
தினமான
நவம்பர் 27 ல்
முதல் புலி
வரும்
ஈழம்
மீட்டெடுக்கும்
கந்தன்
கைவிட்டாலும்
காவலன்
காப்பான்
என்று
நம்புவோமாக


No comments:
Post a Comment