Wednesday, October 5, 2011

காதல் போதை

சட்டென்று என் எதிரே தோன்றிய
இறைவன் கேட்டான்
மதி வேண்டுமா மது வேண்டுமா என்று?
மதி இருந்தால்
கண்டதையும் யோசிக்க சொல்லும்
ஏதாவது ஒன்றை  செய்ய சொல்லும்
ஏன் அவளையே மறந்து விட கூட சொல்லும்
மது இருந்தால்
விட்டு பிரிந்த அவள் நினைவுகளிலே
 மயங்கி பின் மறித்தும் விடலாம்
என்பதால்
மது போதும் என்றேன்…
  
 
 
 

Saturday, October 1, 2011

நடிகர் திலகம்


இந்திய திரைஉலகின்
தெய்வமகனே
நாங்கள் கண்ட
கட்டபொம்மனே
எங்கள் கப்பல் ஒட்டிய தமிழனே
இந்தியாவின்
மர்லன் ப்ரண்டோவே
நடிப்பிலே
உமக்கு முன்னோடி
இல்லை
உமக்கு பின்னோடி
வந்தவர் பலர்
நடிப்பின் இலக்கணமே
என்று பிரான்சிலே
கைரோவிலே
ஏற்று கொண்ட
உம்மை
ஓர் இந்திய சிறந்த நடிகருக்கான
தேசிய விருது
கூட தராமல்
ஒதுக்கப்பட்டதை
எண்ணி
மனம் வேகிறது
இறந்தும் இறவா
புகழோடு வாழ்பவரே
இந்த மண்ணை விட்டு
நீர் மறைந்தாலும்
என்றுமே
திரை உலகின்
விடி வெள்ளி நீர்தான்